25. அருள்மிகு நாண்மதிய பெருமாள் கோயில்
மூலவர் நாண்மதிய பெருமாள், வெண்சுடர் பெருமாள்
உத்ஸவர் வியோமஜோதிப்பிரான், வெஞ்சுடர்பிரான்
தாயார் தலைச்சங்க நாச்சியார்
திருக்கோலம் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் சந்திர புஷ்கரணி
விமானம் சந்திர விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார்
இருப்பிடம் திருத்தலைச்சங்க நாண்மதியம், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'தலைச்சங்காடு' என்று அழைக்கப்படுகிறது. மாயவரத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் உள்ள ஆக்கூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆக்கூரிலிருந்து தலைச்சங்காடு வந்து அங்கிருந்து இடதுபுறம் பிரியும் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.
தலச்சிறப்பு

Thalachangam Gopuram Thalachangam Moolavarசந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை பெருமாள் தீர்த்து வைத்ததால் இத்தலம் 'தலைச்சங்க நாண்மதியம்' என்று அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு 'நாண்மதியப் பெருமாள்' என்ற திருநாமம் ஏற்பட்டது.

மூலவர் நாண்மதியப் பெருமாள், வெண்சுடர் பெருமாள் என்னும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் வியோமஜோதிப்பிரான் என்றும் வெஞ்சுடர்பிரான் என்றும் வணங்கப்படுகின்றார். தாயார் தலைங்சங்க நாச்சியார் என்றும் உத்ஸவ நாச்சியார் செங்கமலவல்லித் தாயார் என்றும் வணங்கப்படுகின்றனர். சந்திரன், தேவர்கள், தேவப்ருந்தங்கர் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.

திருமங்கையாழ்வார் 2 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com